அமானுஷ்யம்: எரிக்கின் தவறும் மரணமும்

Saturday, June 11, 2011

எரிக்கின் தவறும் மரணமும்

எரிக் தனது வாழ்வின் உச்சத்தில் இருந்தார் .அதிகாரமிகுந்த நண்பர்களின் நட்ப்புணர்வுடன் செல்வாக்கு மிகுந்தவராக , 1933 இல் ஹிட்லர் நாஜிக்களின் தலைவரானபோது நாஜி நண்பர்களோடு தனது வலிமை உயர்வதை அறிந்திருந்தார்.

இந்த நம்பிக்கை எரிக்கினை தவறு செய்ய தூண்டியது ,வினாச காலம் விபரீத புத்தி என்பதற்கு ஏற்ப எரிக் தவறான முன்னவரிப்புகள் கொடுத்தார்

தனது மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்எரிக் தன்னால் ஒரு கட்டிடம் அதுவும் சிறப்பு மிகுந்த கட்டிடம் தீப்பற்றி கொள்வதாகவும் ,கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாளைகளையும் எங்கும் புகை மண்டலமாகவும் ,அதே சமயம் அதன் சாம்பலில் இருந்து அந்த கட்டிடம், புதிய ஒளியுடனும் நம்பிக்கையுடனும் பீனிக்ஸ் பறவை போல எழுவதை காணுவதாகவும் எரிக் கூறுகிறார்.

இந்த கணிப்பு சரியாக 1933 மாதம் 27 தேதி நடேந்தேருகிறது ,ஜெர்மானிய பாராளுமன்ற கட்டிடமாகிய ரிச்ஸ்டாக் நெருப்புக்கு இரையாகிறது. நாஜிக்கள் இதற்க்கு காரணமாக கம்யுனிஸ்ட் மேல் குற்றம் சாட்டுகின்றனர் .இதனால் வெகுண்டெழுந்த மக்கள் ஹிட்லருக்கு வானளாவிய அதிகாரத்தை தரும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க ஒப்புகொள்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தது நாஜி படையினரே.

எரிக்கிர்க்கு இந்த உண்மை தெரியும், இவர்கள் என்பதற்கு மேலாகவும் பல உண்மைகளை எரிக் அறிந்து இருந்தார். இருப்பினும் அவற்றை வெளியிடவில்லை . தனது செயல்களுக்கு பலன் விரைவில் வரும் என்பதை எரிக் அறியவில்லை.

மார்ச் 24 தேதி ஒரு உணவகத்தில் இருந்து வெளிப்படும் எரிக், இரண்டு அடையாளம் தெரியாத மனிதர்களால் அழைத்து செல்ல படுகிறார். பிறகு அவரின் சடலம் மட்டுமே எறிந்த நிலையில் கண்டெடுக்க படுகின்றது .எரிக் மரணம் குறித்து பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது ,எரிக்கிர்க்கு பெரும்பாலானான ரகசியங்கள் அறிந்து இருந்தார். மேலும் எரிக்கின் கொலைக்கு பின் ஜெர்மனியில் இது போன்ற வானவியல் கோள்கள் முன்னரிவித்தளுக்கு தடை செய்யப்பட்டது.

அசாத்திய திறன்களை கொண்ட எரிக் கூட நடப்பின் காரணமாக தனது உயிரை இழந்ததும் அவரின் உயர்வும் தாழ்வும் வரலாற்றில் ஒரு பாடமாகவே இருக்கும்.

No comments:

Post a Comment